நானோ தொழில் நுட்பம். ( மூர்த்தி சிறிது: கீர்த்தி பெரிது)
"அணுவை சத கூறிட்டால் அதன் பெயர் கோண்"-என்று கம்பன் தன் கற்பனையில் உவமை செய்தான். இன்றைய அறிவியல் தொழில் நுட்பம் அசாத்தியமான வளர்ச்சி கண்டு நம்மை பிரமிக்க வைக்கிறது.நானோ நுட்பம் என்பது ஒரு மில்லிமீட்டரை மில்லியன் பங்கு பகுத்தால் கிடைக்கும் மீநுண் அளவில் நிகழ்த்தும் தொழில்நுட்பம்.
தலைமுடியின் விட்டம்(Diametre) நானோ அளவீட்டில் 50000 மடங்கு பெரியது என்றால் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்து கொள்ளுங்கள்.நானோ என்ற கிரேக்க சொல்லுக்கு மிகநுண்ணிய என்று பொருள்.
நானோவின் பயன்பாட்டு பகுதிகள்:
(1)சூரிய மின்சிப்பம் (Solar cells),
(2) சுற்றுபுற நுட்பவியல் (Environmet Technology)
(3)தகவல் தொழில் நுட்பம் ( புதியவகை நினைவிகளை உருவாக்குவதில்-மற்றும் நூண்செயலிகளை(Micro Processor)
4. மருத்துவ துறையிலும்- இதன் பயன்பாடுகள் இருக்கும்.
நானோ என்பது பொதுவான வார்த்தை- இது பல்வேறுபட்ட பகுப்பாய்வுகளிலும்(Analysis), செயல்பாடுகளிலும் அதன் மூலப்பொருளின்(Materials) அளவைக் குறைப்பதாகும். அதிக நினைவுத்திறன், அளவு குறைவு -என்ற வகையில் வளர்ந்து வரும் இதைப் பற்றி விளக்குகிறேன்.
மூர்த்தி சிறிது: கீர்த்தி பெரிது என்பது நானோவிற்கு கச்சிதமாக பொருந்தும்.
1. நானோ மொபில். ( தானியங்கி வாகனம்)-(automobil)
2. நானோலக்ஸ். (ஒளிசார் தொழில் நுட்பம்(Optics)
3நானோ ஃபேப்.(மின்னணுவியல் -Eloctronics)
4.நானோ லைஃப் (Life Science)
(இது பற்றி இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்..- தொடர்வேன்...)
Sunday, January 14, 2007
Sunday, January 7, 2007
அறிவியல் விதிகள்-குறளில்.
குறள் 1
ஆக்க அழிக்க இயலா ஆற்றல்
மாற்றலாம் மற்றொரு ஆற்றலாய்.
ஆற்றல் மாறா கோட்பாடு.
பொருள்:
ஆற்றலை ஆக்கவோ,அழிக்கவோ முடியாது.ஒருவகை ஆற்றலை பிரிதொரு வகை ஆற்றலாக மாற்ற மட்டுமே முடியும்.
ஆழ்பொருள் தத்துவம்:
ஆற்றலின் ஆதி எது ..? அந்தம் எது ..? இந்த பிரபஞ்சத்தின் முதன் முதல் ஆற்றல் எங்கிருந்து ஆரம்பித்தது..? ஆரம்பிக்கவோ , அழிக்கவோ இயலாது என்றால், ஆற்றல் தான்தோன்றியா..? ஆற்றலுக்கு கர்த்தா யாரும் இருக்க முடியாது. ஆறறல் ஒரு நிகழ்த்தும் சக்தி. அதுவே நிகழ் பொருள்(கருப்பொருள்) ஆகிறது. நிகழ்த்துவதும் அதுவே.! நிகழ்வதும் அதுவே.!. அது பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டு தொடர் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறது. மாற்றம் மட்டுமே அதன் தொழில். ஆற்றலின் மாற்றம்தான் பிரபஞ்ச இயக்கம்..!
ஆற்றலின் எல்லை எது.? எல்லை எப்படி இருக்க முடியும்..? தொடர் பிறப்புகள் எடுத்து வரும் ஆற்றலின் பயணத்தில் நாம் காண்பது அணுவிலும் அணு. ஆனால் அணுவின் அணுவையும் ஆற்றல்தானே இயக்குகிறது..
ஆற்றல் ஒரு பருப்பொருளை இயக்குகிறது என்றால் , அந்த பருப்பொருளிலும் ஆற்றலே பொதிந்து (அக ஆற்றலாக) கிடக்கிறது. ஆற்றல் ஆற்றலை இயக்கி ஆற்றல் மாற்றம் ஆகிறது.
இந்த முடிவிலா நிகழ்வில் நீ யார்.? நான் யார்? நீ பிரபஞ்ச ஆற்றல் பயணத்தின் கண்ணுக்கு தெரியாத பகுதி..ஆனாலும் நீ ஆற்றலின் ஒரு அங்கம்.
வளர் சிதை மாற்றத்தில் நீ ஒவ்வொரு நொடியும் பழைய செல்களை உதிர்த்து புதிய செல்களை பெறுகிறாய். அப்படி என்றால் ஒவ்வொரு நொடியும் உன் உடல் புது பிறப்பு எடுக்கிறது.. ஆனாலும் அந்த புதிய செல்களையும் ஏதொ துகளின் மாற்றதில் இருந்தே பெற்று இருக்கிறாய்.
அப்படி என்றால் புதியது எது? பழையது எது..?
குவாண்டம் இயற்பியல் தத்துவப்படியும் அதுவே.! ஒரே பின்ன நொடியில் பிறத்தலும்,இறத்தலும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன..!ஆற்றல் பிறத்தலாகவும், இறத்தலாகவும் ஆகிறது.
பிறத்தலும், இறத்தலும் ஆற்றலின் தொடர்நிகழ்வு..இறத்தல் என்றால் ஆற்றலின் முடிவு அல்ல. அது பிறத்தலுக்கான தொடக்கம். பிறத்தல் என்றால் ஆரம்பம் அல்ல: அது இறத்தலின் தொடக்கம்.
முடிவும் தொடக்கமும் ஒரே புள்ளியில் இருக்கிறது. அதே புள்ளியே அடுத்த புள்ளியை தொடக்கி வைக்கிறது. அந்த புள்ளி அடுத்த புள்ளியை..! இப்படியே தொடர்ந்து அது வட்டம் ஆகிறது. மீண்டும் சுழல்கிறது..இந்த வட்டதில் எது தொடக்கம்.? எது முடிவு ..?
எது தொடக்கமோ அதுவே முடிவகவும், எது முடிவோ அதுவே தொடக்கமாகவும் இருந்தால்தானே அது வட்டம்.
இந்த பிரபஞ்ச த்த்துவம் வட்டவியல் தத்துவம்.
குறள் 2
ஆக்க அழிக்க இயலா ஆற்றல்
மாற்றலாம் மற்றொரு ஆற்றலாய்.
ஆற்றல் மாறா கோட்பாடு.
பொருள்:
ஆற்றலை ஆக்கவோ,அழிக்கவோ முடியாது.ஒருவகை ஆற்றலை பிரிதொரு வகை ஆற்றலாக மாற்ற மட்டுமே முடியும்.
ஆழ்பொருள் தத்துவம்:
ஆற்றலின் ஆதி எது ..? அந்தம் எது ..? இந்த பிரபஞ்சத்தின் முதன் முதல் ஆற்றல் எங்கிருந்து ஆரம்பித்தது..? ஆரம்பிக்கவோ , அழிக்கவோ இயலாது என்றால், ஆற்றல் தான்தோன்றியா..? ஆற்றலுக்கு கர்த்தா யாரும் இருக்க முடியாது. ஆறறல் ஒரு நிகழ்த்தும் சக்தி. அதுவே நிகழ் பொருள்(கருப்பொருள்) ஆகிறது. நிகழ்த்துவதும் அதுவே.! நிகழ்வதும் அதுவே.!. அது பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டு தொடர் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறது. மாற்றம் மட்டுமே அதன் தொழில். ஆற்றலின் மாற்றம்தான் பிரபஞ்ச இயக்கம்..!
ஆற்றலின் எல்லை எது.? எல்லை எப்படி இருக்க முடியும்..? தொடர் பிறப்புகள் எடுத்து வரும் ஆற்றலின் பயணத்தில் நாம் காண்பது அணுவிலும் அணு. ஆனால் அணுவின் அணுவையும் ஆற்றல்தானே இயக்குகிறது..
ஆற்றல் ஒரு பருப்பொருளை இயக்குகிறது என்றால் , அந்த பருப்பொருளிலும் ஆற்றலே பொதிந்து (அக ஆற்றலாக) கிடக்கிறது. ஆற்றல் ஆற்றலை இயக்கி ஆற்றல் மாற்றம் ஆகிறது.
இந்த முடிவிலா நிகழ்வில் நீ யார்.? நான் யார்? நீ பிரபஞ்ச ஆற்றல் பயணத்தின் கண்ணுக்கு தெரியாத பகுதி..ஆனாலும் நீ ஆற்றலின் ஒரு அங்கம்.
வளர் சிதை மாற்றத்தில் நீ ஒவ்வொரு நொடியும் பழைய செல்களை உதிர்த்து புதிய செல்களை பெறுகிறாய். அப்படி என்றால் ஒவ்வொரு நொடியும் உன் உடல் புது பிறப்பு எடுக்கிறது.. ஆனாலும் அந்த புதிய செல்களையும் ஏதொ துகளின் மாற்றதில் இருந்தே பெற்று இருக்கிறாய்.
அப்படி என்றால் புதியது எது? பழையது எது..?
குவாண்டம் இயற்பியல் தத்துவப்படியும் அதுவே.! ஒரே பின்ன நொடியில் பிறத்தலும்,இறத்தலும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன..!ஆற்றல் பிறத்தலாகவும், இறத்தலாகவும் ஆகிறது.
பிறத்தலும், இறத்தலும் ஆற்றலின் தொடர்நிகழ்வு..இறத்தல் என்றால் ஆற்றலின் முடிவு அல்ல. அது பிறத்தலுக்கான தொடக்கம். பிறத்தல் என்றால் ஆரம்பம் அல்ல: அது இறத்தலின் தொடக்கம்.
முடிவும் தொடக்கமும் ஒரே புள்ளியில் இருக்கிறது. அதே புள்ளியே அடுத்த புள்ளியை தொடக்கி வைக்கிறது. அந்த புள்ளி அடுத்த புள்ளியை..! இப்படியே தொடர்ந்து அது வட்டம் ஆகிறது. மீண்டும் சுழல்கிறது..இந்த வட்டதில் எது தொடக்கம்.? எது முடிவு ..?
எது தொடக்கமோ அதுவே முடிவகவும், எது முடிவோ அதுவே தொடக்கமாகவும் இருந்தால்தானே அது வட்டம்.
இந்த பிரபஞ்ச த்த்துவம் வட்டவியல் தத்துவம்.
குறள் 2
Subscribe to:
Posts (Atom)